அமெரிக்க கட்டடத்துக்குள் புகுந்த குட்டி விமானம்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமானம் உயராமான ஒரு கட்டடத்துக்குள் புகுந்ததில், அதை ஓட்டி வந்த 15 வயதுசிறுவன் பலியானான்.
அந்த அதிர்ச்சியிலிருந்து அமெரிக்க மக்கள் படிப்படியாக விலகி வரும் இவ்வேளையில் தற்போது ஒருகட்டடத்தில் குட்டி விமானம் புகுந்த சம்பவம் அவர்களைப் பெரும் பீதிக்குள்ளாக்கியுள்ளது.
ஆனாலும் 9ம் வகுப்பு படிக்கும் சார்லஸ் பிஷப் என்னும் அந்தச் சிறுவன் விமானம் ஓட்டக் கற்றுக்கொண்டிருக்கும்போதுதான் தெரியாமல் அந்தக் குட்டி விமானத்தை "டேக்-ஆப்" செய்துவிட்டான்.
செஸ்னா 172 ரகத்தைச் சேர்ந்த இந்த 2 சீட் விமானத்தை சார்லஸ் ஓட்டிக் கொண்டு போனதுமே அமெரிக்கவிமானப் படை விமானங்கள் அந்தக் குட்டி விமானத்தைத் தொடர்ந்தன.
சார்லசுடன் குட்டி விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்க வேண்டும் என்ற அவர்களின் முயற்சி வீணாயிற்று.மொத்தம் 42 மாடிகளைக் கொண்ட பாங்க் ஆப் அமெரிக்கக் கட்டடத்தின் 28 மற்றும் 29வது மாடிகளுக்குஇடையில் விமானத்தை மோத விட்டான் சார்லஸ்.
இந்த விபத்தில் சார்லஸ் மட்டும் பலியாகி விட்டான். அந்த மாடியில் அப்போது யாரும் இல்லாததால் வேறு ஆள்சேதம் ஏதும் ஏற்படவில்லை. விமானமும் தீப்பிடிக்கவில்லை.
இச்சம்பத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அமெரிக்க போலீசார்கூறியுள்ளனர்.