வாஜ்பாய்-முஷாரப் திடீர் சந்திப்பு
காத்மாண்டு:
சார்க் மாநாட்டின் அதிரடித் திருப்பமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் பாகிஸ்தான்அதிபர் பர்வேஸ் முஷாரப்பும் தனியாக சந்தித்துப் பேசினர்.
ஆனால் வாஜ்பாயோ இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று கூறினார்.
சார்க் மாநாட்டின் நிறைவு விழா முடிந்த பிறகு தலைவர்கள் அனைவரும் மாநாட்டு மேடையை விட்டுவெளியேறுவதற்குச் சற்று முன்னர் இந்த இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைக் குறைப்பதற்கு மட்டுமல்லாமல் மேற்கொண்டு பலபேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இந்தச் சந்திப்பு ஒரு வழிகாட்டியாக அமைந்து என்றும் முஷாரப் கூறினார்.
மிகச் சில நிமிடங்களே நடந்த இந்தச் சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களைச் சந்தித்த முஷாரப், இரு நாட்டுஎல்லைகளில் படைக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும் வாஜ்பாயுடன் பேசியதாகக்குறிப்பிட்டார்.
ஆனால், இது மரியாதை நிமித்தமான சந்திப்பே தவிர வேறு எதுவுமில்லை. எதைப் பற்றியும் விரிவாகப்பேசவில்லை என்று வாஜ்பாய் கூறினார்.












Click it and Unblock the Notifications