போர் விமானத்தில் பாக். சென்ற டோனி பிளேர்
டெல்லி:
பாகிஸ்தான் மீது பயணிகள் விமானத்தில் பறப்பது ஆபத்தானது என்பதால் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர்ராணுவத்தின் குண்டுவீச்சு விமானத்தில் பாகிஸ்தான் சென்றார்.
ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது இந்த விமானம்.
முன்னதாக அவர் இங்கிலாந்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேசின் சிறப்பு போயிங் விமானத்தில் அவர் பங்ளாதேஷ்வழியாக இந்தியா (பெங்களூர்) வந்தார். அதில் தான் அவர் டெல்லிக்கும் சென்றார். ஆனால், டெல்லியில் இருந்துராணுவ விமானத்தில் தான் இஸ்லாமாபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் வந்த சிறப்பு போயிங் விமானம் டெல்லியில் தான் நிறுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் நிறைந்த பாகிஸ்தானின் வான்வெளி மிக ஆபத்தானது என்பதாலும் அருகில் ஆப்கானிஸ்தான்இருப்பதாலும் அவரை ராணுவ விமானத்தில் தான் இங்கிலாந்து விமானப் படையினர் அழைத்துச் சென்றனர்.
இந்த விமானத்தில் இங்கிலாந்து ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படை கமாண்டோக்களும் உடன் சென்றனர்.
பிரதமர் பிளேரை ஒரு பாரா-கமாண்டோவைப் போலத் தான் அழைத்துச் செல்கிறோம் என ராயல் ஏர்போர்ஸ்அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த விமானத்தில் ஒரு அதிபரின் விமானத்தில் இருக்க வேண்டிய எந்தவசதியும் கிடையாது. ராணுவ வீரர்களுடன் அமர்ந்து தான் அவரும் அவரது மனைவியும் பயணம் செய்தனர்.
நாளை இதே விமானத்தில் தான் அவர் டெல்லி திரும்புவார். இங்கிருந்து பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் பயணிகள்விமானத்தில் லண்டன் செல்வார்.
இரு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற அப்போதைய அமெரிக்க அதிபர் பில்கிளின்டனும் இதே போல ராணுவ விமானத்தில் தான் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்பாகிஸ்தானுக்குள் அவர் பல கார்கள் மாறி மாறித் தான் பயணம் செய்ய வேண்டி இருந்தது.
அடுத்த நாட்டின் அதிபர் கூட சுதந்திரமாகப் பறக்க முடியாத அளவுக்கு பாகிஸ்தானின் வான்வெளிஆபத்தானதாகிவிட்டது.
பாகிஸ்தானின் பல தீவிரவாத அமைப்பினரிடம் சாம் ரக ஏவுகணைகள் உள்ளன. ஆப்கானிஸ்தானுக்குள் ரஷ்யப்படைகள் நுழைந்தபோது அவர்களை எதிர்க்க இந்த ஏவுகணைகளை அமெரிக்கா தான் தீவிரவாதிகளுக்குத் தந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.
தோளில் வைத்துக் கொண்ட லாஞ்சர் மூலம் இந்த ஏவுகணையைச் செலுத்தி விமானங்களை வீழ்த்த முடியும்.
பிளேர் பயணம் தோல்வி?:
இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றத்தைத் தணிக்க பிளேர் மேற்கொண்டுள்ள முயற்சிகள்தோல்வியடைந்துவிட்டதாக பிரிட்டன் பத்திரிக்கைகள் கருத்துத் தெரிவித்துள்ளன.
பிளேரின் பயணத்துக்குப் பின்னரும் இரு நாடுகளும் தொடர்ந்து படைகளைக் குவித்து வருகின்றன என தகார்டியன் கூறியுள்ளது. இதே போன்ற கருத்தைத் தான் பிற முக்கிய பத்திரிக்கைகளும் தெரிவித்துள்ளன.
புஷ்சுடன் தொலைபேசியில் பேச்சு:
பாகிஸ்தான் புறப்படும் முன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுடன் டோனி பிளேர் தொலைபேசியில் 15 நிமிடங்கள்ஆலோசனை நடத்தினார்.
இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் தான் நடத்திய ஆலோசனை குறித்தும், பாகிஸ்தானில் தான் பேச உள்ளதுகுறித்தும் புஷ்சிடம் விளக்கினார் பிளேர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications