அமெரிக்கா சென்றார் அத்வானி
டெல்லி:
ஆறு நாள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அமெரிக்கவுக்குப் புறப்பட்டுச் சென்றார் உள்துறைஅமைச்சர் எல்.கே. அத்வானி.
ஆனால் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்திப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தற்போது நிலவி வரும் பதற்றம், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பயங்கரவாதச்செயல், அவற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவை குறித்து அத்வானி அமெரிக்கத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
ஜான் அஷ்ராப்ட்டின் அழைப்பை ஏற்றுத்தான் அத்வானி அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது. நாளை அவர்கள் இருவரும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
மேலும் அமெரிக்காவின் முக்கிய பத்திரிக்கைகளான "வாஷிங்டன் போஸ்ட்" மற்றும் "வாஷிங்டன் டைம்ஸ்"ஆகியவற்றுக்குப் பேட்டியளிக்கும் அத்வானி, முன்னனி தொலைக்காட்சிகளிலும் தோன்றிப்பேட்டியளிக்கவுள்ளார்.
கடந்த செப்டம்பர் 11ல் தீவிரவாதிகளின் தாக்குதலில் தரைமட்டமான நியூயார்க்கின் உலக வர்த்தக மையக் கட்டடம்இருந்த இடமான "கிரவுண்ட் ஜீரோ"வுக்கும் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.11) அத்வானி செல்கிறார்.