தீவிரவாத அமைப்புகளை முடக்க முஷாரப்புக்கு புஷ் கோரிக்கை
வாஷிங்டன்:
தீவிரவாத அமைப்புகளை முடக்கி இந்திய எல்லையில் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்குஅமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அதன் விளைவுகள் படு மோசமாக இருக்கும் என்றும் புஷ்எச்சரித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அங்கு போரை நடத்திய அமெரிக்கா,இந்திய-பாகிஸ்தான் போர் மட்டும் வந்துவிடக் கூடாது என்பதில் தீவிர அக்கறை செலுத்தி வருகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்படவிருக்கும் போரைத் தடுத்து நிறுத்த கடுமையான முயற்சிகளைஎடுத்து வருகிறோம் என்று புஷ் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கவெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்டு பெளச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை நசுக்கியுள்ள அமெரிக்கா, இந்திய-பாகிஸ்தான் விஷயத்தில் மட்டும்பேச்சுவார்த்தைதான் சரி என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறது.
பதற்றத்தைத் தணிப்பதற்காக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சிறப்புத் தூதரை அமெரிக்கா அனுப்பும் என்றுகடந்த வார இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தூதர் என்று கூறவில்லை. அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவரை அங்கு அனுப்புகிறோம் என்றுஇப்போது பெளச்சர் பல்டி அடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications