பாகிஸ்தானுக்கு சீனா தரும் புதிய நெருக்கடி
டெல்லி:
ஆப்கானிஸ்தான் போருக்காக அமெரிக்காவுக்கு 2 விமான நிலையங்களைக் கொடுத்ததற்காக பாகிஸ்தான் மீதுசீனா கடுமையான கோபத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் போருக்காக ஜகோபாபாத் மற்றும் பாஸ்னி விமான நிலையங்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அமெரிக்காவுக்கு அவற்றைக் கொடுத்து விட்டது பாகிஸ்தான்.
அமெரிக்காவின் பரம எதிரியான சீனாவுக்கு இந்த விஷயம் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
போருக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும் போர் விமானங்களையும் பாகிஸ்தானுக்கு அவ்வப்போதுதந்து உதவிக் கொண்டிருப்பது சீனாதான். அந்த வகையில் பாகிஸ்தானில் உள்ள க்வாடார் துறைமுகத்தை முழுக்கமுழுக்க ராணுவத் துறைமுகமாக மாற்றித் தரும் பணியையும் சீனா மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு உதவி செய்தது பற்றி பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பிடம் பலமுறைவிளக்கம் கேட்டுள்ளது சீனா. ஆனால் எதற்கும் சரியான பதில் சொல்லாமல் மழுப்பி வந்துள்ளார் முஷாரப்.
இது சீனாவின் கோபத்தைத் தூண்டியுள்ளது. சார்க் மாநாட்டுக்காக காட்மாண்டு செல்லும் வழியில் பெய்ஜிங் வந்தமுஷாரப்பிடம் மீண்டும் சீனா இதுகுறித்து விளக்கம் கேட்டது.
இப்போதும் சரியான பதில் கிடைக்காததால், க்வாடார் துறைமுகப் பணியை முடக்கி வைக்கப் போவதாக சீனாமிரட்டியுள்ளது.
மேலும் சீனாவின் ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா உளவு பார்ப்பதற்கு பாகிஸ்தான் உதவி வருவதாகவும்அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது.