செக்ஸ் டாக்டர் சிறையில் அடைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

செக்ஸ் டாக்டர் பிரகாஷ் போலீஸ் விசாரணைக்குப் பின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி சென்னை போலீஸாரால் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். இன்டர்நெட் மூலம்விபச்சாரத்தை மேற்கொண்டது, ஆபசா சிடிக்களைத் தயாரித்து விற்றது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடந்த விசாரணையின்போது தினம் தினம் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகின. கிட்டத்தட்டஆயிரக்கணக்கான பெண்கள், டிவி நடிகைகள், சினிமா நடிகைகளை அவர் மோசடியாக தனது ஆபாசதொழிலுக்குப் பயன்படுத்தியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

12 நாள் தீவிர விசாரணைக்குப் பிறகு பிரகாஷை, சைதாப்பேட்டையில் உள்ள 17-வது பெருநகர மாஜிஸ்திரேட்கோர்ட்டில் போலீஸார் திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர்.

அவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து பிரகாஷ் சென்னை மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பின்னர் செவ்வாய்க்கிழமை மீண்டும் பிரகாஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட வேண்டும், அப்போது அவரதுநீதிமன்றக் காவல் நீட்டிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

பிரகாஷ் கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டபோது, அவரை எதிர்த்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்தபெண்கள் கோஷமிட்டனர். பிரகாஷுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+