வருகிறது போர் வரி
டெல்லி:
பாதுகாப்புத் துறைக்கு இன்னும் அதிகமாகச் செலவிட வேண்டியிருப்பதால் புதிய வரிகளை விதிப்பதற்கானஅதிகாரம் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் இவ்வேளையில் மத்திய அரசின் இந்தஅறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வரி விதிப்பிற்கான அனைத்து அதிகாரங்களையும் சின்ஹாவுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளதையடுத்து,பாகிஸ்தானுடன் போர் தொடுக்கவும்கூட இந்தியா முழு அளவில் தயாராகி வருவது தெரிய வருகிறது.
வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டின்போதுதான் புதிய வரிகள் விதிக்கப்படும்.
ஆனால் தற்போது "அவசரகால வரி" என்ற பெயரில் அடுத்த சில தினங்களிலேயே பல புதிய வரிகளை சின்ஹாஅறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து பல பொருள்களின் விலை "ஜெட்" வேகத்தில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
போர் வரும் சூழ்நிலையில் அவசர அவசரமாக விதிக்கப்படும் இந்த வரிகளை யாரும் எதிர்க்க முடியாது. எனவேவிலையேற்றத்துக்கு மக்கள் தயாராக வேண்டியதுதான் ஒரே வழி.
கடந்த மாதம் பாகிஸ்தானும் திடீர் போர் வரியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications