கண்ணகி சிலைக்காக திமுக நடத்தும் கவியரங்கம்
சென்னை:
கண்ணகி சிலையை மீண்டும் மெரீனா கடற்கரையில் அதே இடத்தில் வைக்கக் கோரி வரும் சனிக்கிழமை திமுகஇலக்கிய அணி சார்பில் கவியரங்கம் நடைபெறவுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக,பொதுப்பணித்துறை அகற்றியது. அந்தி சிலையை மியூசியத்தில் வைத்திருப்பதாகவும் அரசு கூறி வருகிறது.
ஆனால் திமுக உட்பட பல எதிர்க்கட்சிகள், தமிழக அரசு வாஸ்து காரணத்தை காட்டி சிலையைஅப்புறப்படுத்தியதாகவும், மீண்டும் சிலையை அதே இடத்தில் நிறுவுமாறும் போராடி வருகின்றன.
இந்நிலையில் திமுக உட்பட பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அறப் போராட்டக் குழு ஒன்றை அமைத்தது.
சமீபத்தில் திமுக தமிழறிஞர்கள், எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட தமிழ் மாநாட்டை நடத்தியது. இந்நிலையில்கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவக் கோரி வரும் சனிக்கிழமை திமுக இலக்கிய அணி சார்பில்கவியரங்கம் நடைபெற உள்ளது.
இந்த கவியரங்கத்தில் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராஜா மற்றும் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், திமுகநிர்வாகிகள், தமிழறிஞர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications