லாரி மோதி திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர் சாவு
திருச்சி:
திருச்சி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது லாரி மோதி ஒருவர்உடல் நசுஙகி இறந்தார்.
சேலத்தை சேர்ந்த ராஜா அண்ணாமலை(23), திருச்சி வெற்றி ராஜன் (23) இருவரும் திருச்சி மருத்துவக் கல்லூரிமாணவர்கள். மருத்துவ விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு பரீட்சை நடைபெறுவதால் இரவு முழுவதும் விழித்திருந்து படிக்க எண்ணி, இரவு 11.30க்கு ஒருமோட்டார் சைக்கிளில் ஜங்சன் பஸ் நிலையம் வந்து ஒரு கடையில் டீ குடித்தனர் இந்த மாணவர்கள்.
அதன் பிறகு இருவரும் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, கோரிமேடு பகுதியில் முன்னே சென்ற ஒருவேனை முந்திச் சென்ற போது எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் ராஜா அண்ணாமலை லாரி சக்கரத்தில் நசுங்கி அதே இடத்தில் இறந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவெற்றி ராஜனை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications