ஏர்-இந்தியா விமானங்கள் இனி டெல்லியில் இறங்காது
Subscribe to Oneindia Tamil
மும்பை:
பாகிஸ்தான் வான் பகுதியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு அந்நாடு தடை விதித்துள்ளதால் டெல்லியிலிருந்துவெளிநாடுகளுக்கு நடந்து கொண்டிருந்த ஏர்-இந்தியாவின் விமான சேவை இனி மும்பையிலிருந்துதான் நடக்கும்.
இதன்படி டெல்லியிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்துக்குக் கிளம்பும் விமானங்களும்,அங்கிருந்து டெல்லிக்கு வரும் விமானங்களும் இனி மும்பையிலிருந்தே இயக்கப்படும் என்றும் ஏர்-இந்தியாஅதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் வான் பகுதியில் இந்திய விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், எப்படியும் மும்பைவழியாகச் சுற்றிக் கொண்டுதான் போய், வர வேண்டியிருக்கும்.
இதையடுத்து டெல்லியிலிருந்து இந்த வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக மும்பைக்குச் சிறப்புவிமானங்களை இயக்கவும் ஏர்-இந்தியா முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications