For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெய்ஷ் அமைப்பின் மூத்த தலைவர் பாகிஸ்தானில் கைது

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகம்மது என்ற தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஹசன் பார்க்கி கைதுசெய்யப்பட்டார்.

இரவு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பஹவல்பூரில் நேற்று (புதன்கிழமை) இரவு பார்க்கியை போலீசார் கைதுசெய்தனர். ஜெய்ஷ் அமைப்பின் தலைமையகம் இந்த ஊரில்தான் உள்ளது.

பார்க்கியின் கைதைத் தொடர்ந்து, இவ்வமைப்பின் முக்கியத் தலைவர்கள் அனைவரையும் பாகிஸ்தான் போலீசார்கைது செய்துள்ளனர்.

காஷ்மீரிலும் மற்ற இந்திய நகரங்களிலும் பயங்கரமான தாக்குதல் நடத்துவோம் என்று இவர் கடந்த சிலநாட்களாகக் கூறிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து, தீவிரவாதிகளை ஒடுக்குகிறோம் என்று கூறிக்கொண்டு இவரையும் பாகிஸ்தான் போலீசார் கைதுசெய்துள்ளனர்.

ஜெய்ஷ் அமைப்பின் தலைவரான மெளலானா மசூத் அஸார், அவருடைய 4 சகோதரர்கள் உள்பட ஏராளமானதீவிரவாதிகள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

லஷ்கர்-ஏ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்து சமீபத்தில் அப்பதவியை ராஜினாமா செய்தஹபீஸ் முகமது சயீத்தும் சில நாட்களுக்கு முன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X