பாகிஸ்தானில் பின் லேடனைத் தேட அமெரிக்கா முடிவு
லண்டன்:
சர்வதேசத் தீவிரவாதி ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கலாம் என்று கருதும் அமெரிக்கா, அங்குவிரைவில் தேடுதல் வேட்டையைத் தொடங்கவுள்ளது.
ஆனால் அமெரிக்கா தேடிக் கொண்டிருக்கும் பின் லேடனும் தலிபான் தலைவர் முல்லா ஒமரும் மட்டும் இன்னும்பிடிபடிவே இல்லை.
அமெரிக்கா கடைசியாகத் தேடி வந்த தோரா போரா மலைப் பகுதிகளிலும் ஒசாமா இருப்பது போலத்தெரியவில்லை. இருந்தாலும் அப்போதைக்கு அப்போது அப்பகுதிகளில் அமெரிக்கா இன்னும் குண்டுகளை வீசிக்கொண்டுதான் இருக்கிறது.
இதற்கிடையே பின் லேடன் ஈரானுக்குத் தப்பி விட்டான் என்றும், பாகிஸ்தானுக்குத் தப்பி விட்டான் என்றும்பல்வேறு தகவல்கள் வர ஆரம்பித்தன. பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி விட்டதாகவும் சிலதகவல்கள் வந்தன.
ஒரு கட்டத்தில் நுரையீரல் நோயால் பின் லேடன் இறந்து விட்டான் என்றும் தலிபான் தலைவர் ஒருவரேதெரிவித்தார்.
ஆனால் அமெரிக்கா இவற்றையெல்லாம் நம்பத் தயாராக இல்லை. பின் லேடன் இன்னும் எங்கோபதுங்கியுள்ளான் என்று மட்டும் அது முழுமையாக நம்புகிறது.
தேடுவதை நிறுத்தி விட்டால், அவன் திடீரென்று எங்கிருந்தாவது கிளம்பி கடுமையான தாக்குதலை நடத்துவான்என்று அமெரிக்கா கருதுகிறது.
இதையடுத்து சந்தேகப்படும் இடங்களிலெல்லாம் தேடுதல் வேட்டையை நடத்துவது என்று அமெரிக்கா முடிவுசெய்துள்ளது. முதல் கட்டமாக அமெரிக்காவின் பார்வை பாகிஸ்தான் நோக்கி திரும்பியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிய அல்-கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளை அமெரிக்கா வந்து தேடுவதற்குபாகிஸ்தானும் அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications