ரயில் நிலையங்களில் சிறப்பு வெடிகுண்டு நிபுணர் குழு
சென்னை:
தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் பாதுகாப்புக்காக சிறப்பு பயிற்சி பெற்ற வெடிகுண்டு நிபுணர் குழுஅமைக்கப்பட உள்ளது.
நாடாளுமன்றம் தாக்கப்பட்டதற்கு பிறகு நாடு முழுவதும் போலீஸ் உட்பட அனைத்து பாதுகாப்பு பிரிவினரும்உஷார் நிலையில் உள்ளனர்.
இருந்தாலும் ரயில் நிலையங்கள் உட்பட பல அரசு நிறுவனங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல்கள்வந்து கொண்டே தான் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து மத்திய அரசு நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களுக்குகூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களான சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய ரயில்நிலையங்களில் அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் கோவை ரயில்நிலையங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
இது தவிர சென்னை, கோவை ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படையில் விசேஷ பயிற்சி பெற்றவெடிகுண்டு நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வெடிகுண்டை மோப்பம் பிடிக்கும் பயிற்சிபெற்ற நாய்களும் இடம் பெற்றுள்ளது.
சென்னை, கோவையை அடுத்து திருச்சி, மதுரை ரயில் நிலையங்களிலும் வெடிகுண்டு நிபுணர் குழு அமைக்கப்படஉள்ளது.












Click it and Unblock the Notifications