For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலி வேட்பாளர்கள் சேர்ப்பா? - விசாரிக்க வருகிறார் மத்திய தேர்தல் அதிகாரி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஆண்டிப்பட்டி மற்றும் சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக மத்திய தேர்தல் கமிஷன் அதிகாரி இன்று (வியாழக்கிழமை)தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் ஆண்டிப்பட்டி, சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய 3 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 21ம்தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

ஆண்டிப்பட்டி தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆண்டிப்பட்டியில் 11,000 போலி வாக்காளர்களும் சைதாப்பேட்டையில் 18,000 போலிவாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுகவினர் புகார் கூறினர்.

இதுகுறித்து மத்திய தேர்தல் கமிஷனிடம் திமுக எம்.பிக்களான குப்புசாமி மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் புகார்கொடுத்தனர்.

இதையடுத்து, இவ்விரு தொகுதிகளிலும் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனரா என்பது பற்றி விசாரணைநடத்துவதற்காக ஒரு அதிகாரியை அனுப்ப மத்திய தேர்தல் கமிஷன் முடிவெடுத்தது.

அதன்படி ஒரு தேர்தல் அதிகாரி இன்று தமிழகம் வருகிறார். ஆண்டிப்பட்டி மற்றும் சைதாப்பேட்டைதொகுதிகளுக்கு அவர் நேரில் சென்று விசாரணை நடத்தவுள்ளார்.

அந்த அதிகாரி அறிக்கை சமர்ப்பித்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன்வட்டாரங்கள் தெரிவித்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X