For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலி வாக்காளர்கள் குறித்து விசாரணை: ஆண்டிப்பட்டியில் மத்திய தேர்தல் அதிகாரி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆண்டிப்பட்டி தொகுதியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக வந்த புகார் தொடர்பாக இன்று(வெள்ளிக்கிழமை) அங்கு விசாரணை நடத்தி வருகிறார் மத்திய தேர்தல் அதிகாரி கே.ஜே. ராவ்.

சைதாப்பேட்டையில் சுமார் 18,000 போலி வாக்காளர்களும் ஆண்டிப்பட்டியில் சுமார் 11,000 போலிவாக்காளர்களும் வாணியம்பாடியில் 17,000 போலி வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல்கமிஷனிடம் திமுக புகார் கொடுத்து.

அதன்படி நேற்று சைதாப்பேட்டை தொகுதியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியராவ், இன்று ஆண்டிப்பட்டியில் முகாமிட்டுள்ளார்.

முதற்கட்டமாக இன்று காலை திமுக மற்றும் அதிமுக பிரமுகர்களைச் சந்தித்து ராவ் விசாரணை நடத்தினார்.அப்போது இரு தரப்பினருமே ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர்.

"அவர்கள் தெரிவித்ததை நான் கூர்மையாகக் கவனித்தேன். அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில்இன்று பிற்பகல் இத்தொகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று விசாரணை நடத்துவன்ே" என்றார் ராவ்.

ஆண்டிப்பட்டியில் விசாரணையை முடித்துக் கொண்ட பிறகு, நாளை வாணியம்பாடி தொகுதியிலும் அவர்வாக்காளர் பட்டியல்களைச் சரிபார்க்கவுள்ளார்.

அனைத்து விசாரணைகளும் முடிந்த பிறகு, வரும் 14 அல்லது 15ம் தேதி தலைமைத் தேர்தல் கமிஷனிடம் ராவ்அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்.

ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X