ஜெ. மீதான லண்டன் ஓட்டல் வழக்கு தனி நீதிமன்றத்திற்கு மாற்றம்
சென்னை:
ஜெயலலிதா மீதான லண்டன் ஓட்டல் வழக்கை முதலாவது தனி நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 66.65 கோடி சொத்து சேர்த்த வழக்கில்ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குதொடர்ந்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஜெயலலிதாவும், தினகரனும் லண்டனில் நட்சத்திரஹோட்டல்கள் இரண்டை வாங்கி விற்றதன் மூலம் 43 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளதாக வழக்குதொடர்ந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை போலீசார் முதன்மை செஷன்ஸ் நீதிபதி முன்பு தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி அசோக்குமார் குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரையும் நீதிமன்றத்தில்ஆஜராகும்படி சம்மன் அனுப்பினார். ஆனால் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்த சம்மனை ரத்து செய்யுமாறும் வழக்கை தனி நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் ஜெயலலிதாவும்,தினகரனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பி.டி.தினகரன் தனது உத்தரவில் கூறியுள்ளதாவது:
விசாரணையின் ஆரம்பக் கட்டத்திலேயே இதுபோன்று அனுப்பப்படும் சம்மனை ரத்து செய்ய முடியாது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கையும் லண்டன் ஓட்டல் வழக்கையும் ஒரே வழக்காக விசாரிக்கமுடியாது.
வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்த வழக்கின் விசாரணை தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எனவேலண்டன் ஓட்டல் வழக்கை தனியாக உயர் நீதிமன்றத்தில் நடத்துவது சாத்தியமில்லை.
இதனால் லண்டன் ஓட்டல் வழக்கு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருந்து தனி நீதிமன்றத்துக்குமாற்றப்படுகிறது.
இவ்வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் விரைந்து விசாரித்து ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்என்று நீதிபதி தினகரன் தன் உத்தரவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications