போகி பண்டிகை: சென்னையில் டயர், பிளாஸ்டிக்குகளை எரிக்கத் தடை
சென்னை:
சென்னையில் போகிப் பண்டிகை முன்னிட்டு டயர், பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற குப்பையை எரிக்கக் கூடாதுஎன்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
வருடந்தோறும் போகிப் பண்டிகை முன்னிட்டு வீட்டில் உள்ள பழைய பொருட்களை தெருவில் போட்டு எரியவிடுவர்.
அதுவும் சென்னையில் போகிப் பண்டிகையன்று நகரே பயங்கரப் புகையுடன் காணப்படும். ஒரே பனிமூட்டம்போல் புகை எங்கும் சூழ்ந்திருக்கும். இதனால் 10 அடி தூரத்தில் கூட யார் இருக்கிறார்கள் என்று நம் கண்ணுக்குத்தெரியாது.
இந்தக் கடுமையான புகைமூட்டம் காரணமாக கடந்த ஆண்டு போகிப் பண்டிகையன்று சென்னையில் அதிகாலைவிமானப் போக்குவரத்து முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டது.
இதனால் இந்த ஆண்டு போகிக்கு டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் மக்கள் எரிக்க வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
இந்த பொருட்களை எதிர்ப்பதால் காற்று மாசுபடும். எனவே பொது மக்கள் தேவையற்ற குப்பைகளை மாநகராட்சிகுப்பைத் தொட்டியில் கொட்டுமாறு காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இதுபோன்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.