மஞ்சள் துண்டு ரகசியம் வெளியிட்டார் கருணாநிதி
சென்னை:
ஓர் அடையாளத்துக்காகத் தான் மஞ்சள் துண்டை அணிகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஒவ்வொரு அரசியல்வாதியும் அவர்கள் கட்சி கொடியில் உள்ள கலரில் துண்டு அணிவது வழக்கம். ஒருவர்அணிந்துள்ள துண்டை வைத்தே அவர் எந்த கட்சியைச் சேரந்தவர் என்று எளிதாக அறிந்துக் கொள்ளலாம்.
கருணாநிதி சில ஆண்டுகளாக மஞ்சள் துண்டை மட்டுமே அணிந்து வருகிறார். ஜாதகப்பலன்படி, அவர் மஞ்சள்துண்டு அணிந்தால் நல்லது என சில ஜோதிடர்கள் கூறியதால் தான் அவர் மஞ்சள் துண்டு அணிகிறார் என்று வதந்திபரவியது.
கடவுள் நம்பிக்கை இல்லாத கருணாநிதி இது பற்றி சர்ச்சைகள் கிளம்பிய பிறகும் மஞ்சள் துண்டு அணிவதைநிறுத்தவுமில்லை, அதுபற்றி விளக்கவுமில்லை.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த முரசொலியில், அவரே கேள்வி கேட்டு பதில் அளித்துள்ள ஒருபகுதியில், தன் மஞ்சள் துண்டு ரகசியத்தை வெளியிட்டுள்ளார் கருணாநிதி.
அந்த பதிலில், எந்த நம்பிக்கைக்காகவும் மஞ்சள் துண்டை அணியவில்லை, ஓர் அடையாளத்துக்காகத்தான்.
வெற்றியிலும், தோல்வியிலும் விடாமல் அணிந்து கொண்டிருக்கிறேன். இதிலிருந்து புரியவில்லையா? என்றுகருணாநிதி கூறியிருக்கிறார்.