காஷ்மீரில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சண்டைகளில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அனந்தநாக் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 2 இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டைகளில்பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஒரு ராணுவ அதிகாரி காயமடைந்தார்.

இதற்கிடையே நேற்று இரவு பட்காம் மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் லஷ்கர்-ஏ-தொய்பாஅமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதியான சயிபுல்லா என்ற பஷீர் பாய் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இவனிடமிருந்து ஏ.கே. ரக துப்பாக்கி, கிரினேட் ஏவுகணை, 6 கிரினேட் குண்டுகள் உள்பட ஏராளமானவெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

நேற்றிரவு புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஷாடிப்போராவில் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும்தீவிரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகளுமே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் சப்-இன்ஸ்பெக்டரும் கொல்லப்பட்டார். மற்றொரு அதிகாரிக்குகாயம் ஏற்பட்டது.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து 2 ஏ.கே. ரக துப்பாக்கிகளும் ஒரு கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன.

இதற்கிடையே பட்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஒளிந்துள்ள இடத்தைக் கண்பிடித்த எல்லைப் பாதுகாப்புப்படையினர், அங்கிருந்து ஏராளமான ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் கைப்பற்றினர்.

தோடாவில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:

இந்நிலையில் தோடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் இன்று (சனிக்கிழமை) நடத்திய தாக்குதலில் 3தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் இங்குமேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போதுதான் இந்த 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்களிடமிருந்து 2 ஏ.கே. ரக துப்பாக்கிகளும், 2 மேகசின்களும் ஒரு ரேடியோவும் கைப்பற்றப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+