காஷ்மீரில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சண்டைகளில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதற்கிடையே நேற்று இரவு பட்காம் மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் லஷ்கர்-ஏ-தொய்பாஅமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதியான சயிபுல்லா என்ற பஷீர் பாய் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இவனிடமிருந்து ஏ.கே. ரக துப்பாக்கி, கிரினேட் ஏவுகணை, 6 கிரினேட் குண்டுகள் உள்பட ஏராளமானவெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
நேற்றிரவு புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஷாடிப்போராவில் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும்தீவிரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகளுமே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் சப்-இன்ஸ்பெக்டரும் கொல்லப்பட்டார். மற்றொரு அதிகாரிக்குகாயம் ஏற்பட்டது.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து 2 ஏ.கே. ரக துப்பாக்கிகளும் ஒரு கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையே பட்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஒளிந்துள்ள இடத்தைக் கண்பிடித்த எல்லைப் பாதுகாப்புப்படையினர், அங்கிருந்து ஏராளமான ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் கைப்பற்றினர்.
தோடாவில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:
இந்நிலையில் தோடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் இன்று (சனிக்கிழமை) நடத்திய தாக்குதலில் 3தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் இங்குமேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போதுதான் இந்த 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 2 ஏ.கே. ரக துப்பாக்கிகளும், 2 மேகசின்களும் ஒரு ரேடியோவும் கைப்பற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications