மார்க்சிஸ்ட்டும் அதிமுகவுக்கு "குட் பை"
சென்னை:
வரும் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கோ திமுகவுக்கோ ஆதரவளிக்கப் போவதில்லை என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.
இதையடுத்து அதிமுக கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகள் அனைத்தும் வெளியேறிவிட்டன.
ஆண்டிப்பட்டி, சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய 3 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 21ம் தேதிநடைபெறும் இடைத் தேர்தலில் திமுகவும் அதிமுகவும் தனித்தனியாகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
இந்த 2 கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரிக்கப் போவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்செயலாளர் என். சங்கரையா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
தற்போது தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுக, மக்கள் விரோத அரசாகவே செயல்பட்டு வருகிறது என்றும்சங்கரையா கூறினார்.
கடந்த வாரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று தமாகாவும் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டனஎன்பது குறிப்பிடத்தக்கது.
இதை வரவேற்ற சங்கரையா, இந்த 2 கட்சிகளிடமும் கலந்தாலோசனை செய்த பிறகு இடைத் தேர்தல் குறித்துதங்கள் கட்சியின் நிலையைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.
கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த மார்க்சிஸ்ட் கட்சி, அக்டோபரில் நடந்தஉள்ளாட்சித் தேர்தலில் தனியாகவே போட்டியிட்டது.