ஒசாமா எங்கள் நாட்டில் இல்லை: மீண்டும் பாக். அலறல்
துபாய்:
சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் இல்லை. ஆனால் அவனை தேடுவதற்குத்தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்காவுக்குச் செய்வோம் என்று அந்நாட்டின் பெட்ரோலியத்துறைஅமைச்சர் உஸ்மான் அமினுதீன் கூறியுள்ளார்.
இந்நிலையில் உஸ்மான் சவூதி அரேபியாவில் உள்ள அபுதாபியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியிருப்பதாவது:
50 ஆண்டுகளாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அதனால் சிறு சிறுசண்டைகள் எல்லையில் நடந்து வருகிறது.
நாங்கள் இரு நாடுகளிடையே அமைதியையே விரும்புகிறோம். காஷ்மீர் பிரச்சனையைப் பற்றி விரைவில்பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனையை விரைவில் தீர்க்க வேண்டும்.
ஒசாமா பாகிஸ்தானில் இல்லை. அமெரிக்கா ஒசாமாவை பாகிஸ்தானில் தேட வேண்டும் என்றால், அவனைத்தேடுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய பாகிஸ்தான் அரசு தயாராக உள்ளது என்று உஸ்மான்கூறினார்.
ஆப்கானில் அமெரிக்கா தொடர்ந்து குண்டு வீச்சு:
கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் பகுதியில் உள்ள முன்னாள் தலிபான்களின் தீவிரவாத முகாம்கள் மீதுதொடர்ந்து அமெரிக்க விமானங்கள் கடுமையாகக் குண்டு வீசித் தாக்கி வருகின்றன.
தோரா போரா மலைப்பகுதியிலிருந்து தப்பி வந்த தீவிரவாதிகள் இங்கு பதுங்கியிருக்கலாம் என்று அமெரிக்காநம்புவதால், இந்த பகுதியில் கடந்த 3ம் தேதியிலிருந்து அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசிவருகின்றன.












Click it and Unblock the Notifications