லஷ்கர், ஜெய்ஷ் அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தடை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்குக் காரணமான லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகம்மது போன்றதீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
இந்த அமைப்புகளின் தலைவர்களைக் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்த பாகிஸ்தான், இப்போதுதான்அவற்றைத் தடை செய்ய முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தியாவின் நெருக்குதலுக்குப் பணிந்தோ பயந்தோ முஷாரப் இந்நடவடிக்கையை எடுத்த மாதிரிதெரியவில்லை. சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாகவே இந்த 2 அமைப்புகளைத் தடை செய்துள்ளார் அவர்.
மேலும் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பழமைவாத மத அமைப்புகளான சிபா-ஏ-ஏவுகபா மற்றும்தெகரிக்-ஏ-ஜபரியா போன்ற அமைப்புகளையும் பாகிஸ்தான் தடை செய்துள்ளது.
ஆனால் இந்தியா கேட்டுள்ள 20 தீவிரவாதிகளை ஒப்படைப்பதற்கு முஷாரப் மறுத்து விட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications