இந்தியாவில் சீனப் பிரதமர்
Subscribe to Oneindia Tamil
ஆக்ரா:
சீனப் பிரதமர் சூ ரோங்ஜி 6 நாள் அரசு முறைப் பயணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வந்து சேர்ந்தார்.
இன்று மாலை தாஜ்மகாலையும் ஆக்ரா கோட்டையையும் கண்டு களிக்கும் ரோங்ஜி, நாளை காலை டெல்லி சென்றுபிரதமர் வாஜ்பாயைச் சந்திக்கவுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வாஜ்பாயிடம்வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
இருந்தாலும் வர்த்தகம் தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒப்பந்தங்களில்தான் அவர் அதிககவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.
கடந்த 11 ஆண்டுகளில் சீனப் பிரதமர் ஒருவர் இந்தியாவுக்கு வருவது இதுதான் முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications