இந்தியாவைக் கண்டுகொள்ளாத முஷாரப்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் மக்களுக்குத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் இந்தியாவின்கோரிக்கைகளைப் பற்றி அவ்வளவாகக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
பாகிஸ்தானைச் சேர்ந்த யாரையும் இந்தியாவிடம் மட்டுமல்ல எந்த நாட்டிடமும் ஒப்படைக்க மாட்டோம் என்றுதிமிராகக் கூறியுள்ளார்.
மேலும் பாகிஸ்தான் நாட்டைச் சேராதவர்களும் இந்தியா அளித்துள்ள பட்டியலில் உள்ளார்கள். ஆனாலும்போதுமான ஆதாரத்தை இந்தியா அளித்தால் அவர்கள் மீது நாங்களே நடவடிக்கை எடுப்போமே தவிரஇந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்றும் முஷாரப் கூறியுள்ளார்.
அதே நேரம் காஷ்மீர் தொடர்பான கொள்கையில் பாகிஸ்தான் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றுகூறிய முஷாரப், ஆனால் காஷ்மீர் பிரச்சனையைக் கூறி தீவிரவாத செயல்களில் எந்த அமைப்பும் ஈடுபடுவதைஅனுமதிக்க முடியாது என்று மட்டுமே கூறியுள்ளார்.
காஷ்மீர் பிரச்சனையைப் பேசித் தீர்க்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் வாஜ்பாயை ஒரு அதிபர் என்றமுறையில் நான் கேட்டுக் கொள்கிறேன் என்றும் முஷாரப் வேண்டியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் தீவிரவாத முகாம்களை விட பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுப்படையினரின் பயிற்சி முகாம்கள்தான் அதிகமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications