ஜஸ்வந்த் சிங் - பாவெல் தொலைபேசியில் பேச்சு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காலின்பாவெல்லும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொலைபேசியில் பேசினர்.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் தொலைக்காட்சி உரை குறித்து இருவரும் விவாதித்தனர்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தவிர்ப்பது குறித்து பேச்சுவார்த்தைநடத்துவதற்காக வரும் 17ம் தேதி இந்தியா வரவுள்ளார் பாவெல்.
அவருடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகக் கூறிய ஜஸ்வந்த் சிங், காஷ்மீர் பிரச்சனையில் 3வதுநாடு தலையிடுவதை ஏற்கனவே மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் இகோர் இவானோவிடமும் தொலைபேசி மூலம் பேசியதாகஜஸ்வந்த் சிங் கூறினார். இவானோவும் விரைவில் இந்தியா வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications