3வது அணி குறித்து விரைவில் முடிவு: இந்திய கம்யூனிஸ்ட்
சென்னை:
மதச்சார்பற்ற 3வது அணி அமைப்பது குறித்து கட்சிகளுடன் பேச முடிவு செய்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட்மாநில செயலாளர் ஆர். நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
இது குறித்து நல்லக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக, பாஜகவுடன் இணைந்தது பிடிக்காமல் தான் நாங்கள் வெளியேறி, அதிமுகவுடன் இணைந்தோம். இப்போதுஅதிமுகவும், பாஜகவுடன் கூட்டணி அமைக்க முயன்று வருகிறது.
மேலும் அதிமுக அரசு மக்கள் விரோத கொள்கைகளை கடைப்பிடித்து ஆட்சி செய்கிறது. கூட்டணியில் உள்ளகட்சிகளை கொஞ்சம் கூட அதிமுக மதிக்கவில்லை. எனவே தான் நாங்கள் அதிமுகவிலிருந்து விலகினோம்.
இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற 3வது அணி அமைப்பது குறித்து தமாகா, காங்கிரஸ் உட்பட மற்றக் கட்சிகளுடன்பேச்சு நடத்தவுள்ளோம். இன்னும் சில நாட்களில் எங்கள் முடிவைத் தெரிவிப்போம்.
இந்த பேச்சுவார்த்தையில் இடைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது பற்றியும், மக்களிடம் எவ்வாறுபிரச்சாரம் செய்வது என்பது பற்றியும் பேச உள்ளோம் என்று நல்லக்கண்ணு கூறினார்.