For Quick Alerts
For Daily Alerts
Just In
எல்லையில் பலியான ராணுவ வீரர் குடும்பத்துக்கு தமிழக அரசு நிதியுதவி
சென்னை:
இந்திய எல்லையில் கண்ணி வெடியில் சிக்கி பலியான ராணுவ வீரர் ராஜேந்திரனின் குடும்பத்துக்கு தமிழக அரசுரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கண்ணி வெடியைஅகற்றியபோது, அது வெடித்து உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது தமிழக அரசு.
மேலும் நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்த ராஜேந்திரனின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தரவும், அவரதுமனைவியின் கல்வித் தகுதிக்கேற்ற வேலையை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் எல்லையில் பலியான மேட்டூரைச் சேர்ந்த ராணுவ வீரர் அண்ணாவின்குடும்பத்துக்கும் தமிழக அரசு உதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Tuesday, January 15, 2002, 5:30 [IST]