டெல்லியில் 4 லஷ்கர் தீவிரவாதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் குடியரசு தினத்தன்று குண்டு வைத்து நாசம் விளைவிப்பதற்காக வந்த 4 லஷ்கர்-ஏ-தொய்பாதீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
மேலும் ஜனவரி 15க்குள் அல்-கொய்தா இயக்கத்தினர் அத்வானி உட்பட முக்கிய தலைவர்களைக் கொல்லப்போவதாக உளவுத் துறையினருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து டெல்லி போலீசார் மிக உஷாராக டெல்லியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்டெல்லி போலீசார் நேற்று (திங்கட்கிழமை) இரவு 4 லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகளை கைது செய்தது.
இவர்களிடமிருந்து 8 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளும், ரூ.35 லட்சத்தையும் டெல்லி போலீசார் பறிமுதல்செய்தனர்.
இவர்கள் 4 பேரும் குடியரசு தினத்தன்று மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் குண்டு வைக்கத்திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இத்தீவிரவாதிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications