For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கான் விமான நிறுவனம் மீதான ஐ.நா. தடை நீக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஐக்கிய நாடுகள்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஏரியான விமான நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐ.நா. பாதுகாப்புக்குழு விலக்கியுள்ளது.

சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின் லேடனை அமெரிக்காவிடம் அப்போதைய தலிபான் அரசு ஒப்படைக்கவேண்டும் என்பதற்காக இந்த விமான நிறுவனத்திற்கு ஐ.நா. பாதுகாப்புக் குழு கடந்த 1999ம் ஆண்டு தடைவிதித்திருந்தது.

இதையடுத்து ஏரியானா நிறுவனம் தன்னுடைய விமான சேவையை நிறுத்திக் கொண்டது.

ஆனால் தற்போது தலிபான் அரசு கவிழ்ந்து விட்டதால், ஏரியானா விமான நிறுவனத்தின் மீதான தடைவிலக்கப்படுவதாக ஐ.நா. பாதுகாப்புக் குழு அறிவித்துள்ளது.

ஆனால் இந்த விமான நிறுவனத்துக்குச் சொந்தமான பல விமானங்களும் அமெரிக்க விமானங்களின் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பல விமான ஓடு பாதைகளும் சேதமாகியுள்ளன.

இவை அனைத்தும் சரி செய்யப்பட்ட பிறகுதான் ஏரியானா நிறுவனம் தன்னுடைய விமான சேவையைத் துவக்கும்என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X