இலங்கை: தடையை விலக்க புலிகள் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
மல்லவி (இலங்கை):
நார்வே குழுவினர் விரைவில் பேச்சுவார்த்தையைத் துவக்கவுள்ளதையடுத்து, தங்கள் மீதான தடையை இலங்கைஅரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதனால் தங்கள் மீதுள்ள தடைகளை முழுவதுமாக நீக்க வேண்டும் என்று அவர்கள் இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மக்களைப் போலவே தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கைப்பகுதிகளில் வாழும் தமிழர்களும் தங்கு தடையின்றி எங்கும் சென்று வரலாம் என்பதற்கான உறுதிமொழியையும்அரசு வழங்க வேண்டும் என்றும் புலிகள் கோரியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் அரசியல் குழுத் தலைவரான எஸ்.பி. தமிழ்செல்வன் நிருபர்களிடம் இதைத் தெரிவித்தார்.
தங்கள் மீதான தடையை விலக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications