படகு கவிழ்ந்து 5 பெண்கள் உள்பட 7 பேர் பலி
சென்னை:
சென்னை மெரினாவில் பொங்கலைக் கொண்டாட கடலில் படகு சவாரி சென்றபோது படகு மூழ்கி 3 பெண்கள்பரிதாபமாக இறந்தனர். இதேபோல் நெல்லை மாவட்டம் உவரியிலும் படகு கவிழ்ந்து 4 பேர் பலியானார்கள்.
சென்னையில் மாட்டுப் பொங்கலை ஒட்டி நேற்று (செவ்வாய்க்கிழாமை) ஆயிரக்கணக்கான மக்கள் மெரீனாகடற்கரையில் கூடினர். அங்கு எம்.ஜி.ஆர். சமாதி பின்புறம் 2 மீன்பிடி இயந்திர படகுகளில் தலா 20 பேர் வீதம்பொதுமக்கள் உல்லாச சவாரி செய்தனர்.
படகு மெரீனா கடற்கரை சீரணி அரங்கம் பின்புறம், கரையிலிருந்து சுமார் 50 அடி தூரத்தில் வரும்போது, ராட்சதஅலைக் காரணமாக படகு கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் பயணம் செய்த 20 பேரும் கடலுக்குள்மூழ்கினார்கள். காப்பாற்றுங்கள் என்று அவர்கள் அனைவரும் அலறினர்.
அவர்களை அலறலை கேட்டு அருகில் சென்ற இன்னொரு படகில் சென்றவர்கள் கடலில் மூழ்கிய பெரும்பாலானபேரை காப்பாற்றினார்கள். படகு கவிழ்ந்த பகுதியில் ஆழம் குறைவானதால் நீச்சல் தெரிந்த ஆண்கள் நீந்தி கரைஏறி விட்டனர். ஆனால் பெண்களும், குழந்தைகளும் மட்டும் சிக்கிக் கொண்டார்கள்.
மாலை 5 மணிக்கு 2 பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கின. 3 வது பெண் உயிருக்கு போராடிய நிலையில்மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவர்கள் விவரம், முகப்பேர் ஜெய்குமாரி, பூந்தமல்லிஜெயந்தி, ராதா.
கடலில் மூழ்கிய இரண்டு குழந்தைகள் பிரீத்தி (10), லாவண்யா (2) அதிசயமாக உயிர் தப்பினர். இவர்களின்பெற்றோர் யார் என்று தெரியவில்லை. மயங்கிய நிலையில் இருக்கும் இவர்கள் தனியார் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலில் மூழ்கியவர்களில் இன்னும் வேறு யாராவது இறந்துள்ளார்களா என்ற விவரம் தெரியவில்லை. போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் 4 பேர் பலி
இதே போல் நெல்லை மாவட்டம் உவரியிலும் பொது மக்கள் படகில் சவாரி சென்ற போது படகு மூழ்கி 2 பெண்கள்உட்பட 4 பேர் இறந்தனர்.
மற்றவர்களின் அலறலைக் கேட்டு, அருகே சென்ற மற்றொரு படகுகளில் இருந்தவர்கள், 18 பேரை காப்பாற்றினர்.இந்நிலையில் ஒரு சிறுவனின் உடல் இன்று (புதன் கிழமை) காலை கரை ஒதுங்கியுள்ளது. இன்னும் 2 பேரைக்காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications