நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: கருணாநிதிக்கு நோட்டீஸ்
சென்னை:
டான்சி வழக்கின் தீர்ப்பு குறித்து முரசொலி பத்திக்கையில் கருத்து தெவித்தது தொடர்பாக தமிழக அரசுதொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதிக்கு விளக்கம் கேட்டு சென்னைஉயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டான்சி நில பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கடந்த டிசம்பர் 4ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை விமர்சித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கருணாநிதி சில கட்டுரைகளையும்கார்ட்டூன்களையும் வெளியிட்டதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது.
இவை நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதாக உள்ளன. எனவே கருணாநிதி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று தமிழக அரசு வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமீபத்தில் தாக்கல் செய்தார்.
எந்த விசாரணைக்கும் தான் தயார் என்று இதுகுறித்து கருணாநிதியும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி சுப்புலட்சுமி ஆகியோர்முன்பு இன்று (வியாழக்கிழமை) இந்த மனுவின் மீது விசாரணை நடந்தது.
வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 4 வாரங்களுக்குள் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கருணாநிதிக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
ஆயினும் கருணாநிதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டியதில்லை என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications