Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரீட்டா வழக்கு: உயிருக்குப் போராடும் முக்கிய சாட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மர்மக் கும்பலால் தாக்கப்பட்ட, ரீட்டா கற்பழிப்பு வழக்கின் முக்கிய சாட்சியான ஏகாம்பரத்தின் உடல்நிலைகவலைக்கிடமாக உள்ளது.

சென்னையைச் சேர்ந்த ரீட்டா மேரியை செஞ்சி சிறையில் வைத்து சிறை வார்டன்களே கற்பழித்தனர்.இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சி அதே சிறையில் மற்றொரு அறையிலிருந்த ஏகாம்பரம் என்பவர்,சமீபத்தில் ஜாமீனில் விடுதலையானார்.

இவர் திருவண்ணாமலையில் பழ வியாபாரம் செய்து வந்தார். கடந்த இரண்டு நாட்களக்கு முன், மார்க்கெட்டுக்குச்சென்ற ஏகாம்பரத்தை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து தாக்கி புதரில் வீசியது.

ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதி மக்கள் காப்பாற்றி, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவரது உடல்நிலை திடீரென்று கவலைக்கிடமானது. இதனால், அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை பொதுமருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+