பெரம்பலூரில் அம்பேத்கர் சிலை உடைப்பு: பாமக போராட்டம்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் மர்ம ஆசாமிகளால் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதையடுத்து, பாமகவினர் கதவடைப்பு மற்றும்சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் அம்பேத்கர் சிலை ஒன்றை பாமக நிறுவியிருந்தது. அந்தசிலைக்குப் பக்கத்திலேயே பாமக கொடிக் கம்பமும் இருந்தது.
நேற்று (வியாழக்கிழமை) இரவு சில மர்ம மனிதர்கள் அம்பேத்கர் சிலையின் கை மற்றும் சில பாகங்களைஉடைத்துள்ளனர். மேலும் கொடிக்கம்பத்தில் இருந்த பாமக கொடியையும் கிழித்துள்ளனர்.
இன்று காலையில் இதைக் கண்ட பாமகவினர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர். இதையடுத்து மார்க்கசிஸ்ட்,கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு அந்த பகுதியில் பாமகவினர் கதவடைப்பு நடத்தினர்.
பிறகு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த காவல் துறைக் கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்தார். சம்பவத்தில்தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி பாமகவினரைஅவர் சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து பாமகவினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். ஏராளமான போலீசார் அந்தப் பகுதியில்பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அம்பேத்கார் சிலை உடைப்புச் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications