For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு இறந்த முதிய தம்பதி

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

திருநெல்வேலியில் தனியாக வசித்து வந்த ஒரு தாத்தாவும் பாட்டியும் குடும்பத் தகராறில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இருவருமேஇறந்தனர்.

அவர்களது பிணம் 3 நாட்கள் கழித்து வியாழக்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டது.

திருநெல்வேலி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ஜோசப் (73). இவரது மனைவி சுகந்தி (65). இவர்களது மகன் ஐசக். இவர் தூத்துக்குடியில்வேலை பார்த்து வருகிறார். மனைவி புனிதாவுடன் அவ்வப்போது திருநெல்வேலி வந்து தந்தை, தாயை பார்த்து விட்டுச் செல்வார்.

அதேபோல, வியாழக்கிழமை இரவு ஐசக், தனது மனைவியுடன் நெல்லை வந்தார். பெருமாள்புரத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்தபோதுவீடு உள்பக்கமாக பூட்டிக் கிடப்பதை பார்த்தார்.

மேலும், காலையில் போடப்பட்ட பால் பாக்கெட், நாளிதழ் ஆகியவை வெளியே அப்படியே கிடந்ததைப் பார்த்ததும் குழம்பினார்.சந்தேகப்பட்ட அவர் வீட்டுக்குப் பின்புறமிருந்த ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபோது உள்ளே இருந்த அறையில் ரத்தக் கறைஇருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார் ஐசக். போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு தனித்தனியாக இரு அறைகளில் சுகந்தியும், ஜோசப்பும் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தனர். சுகந்தியின் கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது.

இருவரையும் வெளியில் இருந்து வந்து யாரும் கொல்லவில்லை என்று போலீஸார் உறுதியாக தெரிவித்துள்ளனர். காரணம், கதவுஉள்பக்கமாக பூட்டிக் கிடக்கிறது. மேலும், நகை, பணம் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு ஜோசப்புக்கும்,சுகந்திக்கும் தகராறு ஏற்பட்டிருக்க வேண்டும். அதில் கோபமடைந்த ஜோசப், சுகந்தியை அடித்திருக்க வேண்டும், பதிலுக்கு சுகந்தியும்ஜோசப்பை அடித்திருக்க வேண்டும்.

அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுகந்தியை கழுத்தை நெரித்து ஜோசப் கொன்றிருக்க வேண்டும். பிறகு பயந்து போய் தானும் தற்கொலைசெய்திருக்க வேண்டம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். அடிக்கடி இருவரும் சண்டை போட்டுக் கொள்வது வழக்கம் என்று பக்கத்துவீடுகளில் வசிப்போர் தெரிவித்துள்ளனர்.

இந்த தம்பதிக்கு ஐசக் தவிர இஸ்ரவேல் என்ற மகனும் உள்ளார். அவர் நாக்பூரில் இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X