மதுரையில் அமைச்சர் மீது ஆசிட் பாட்டில் வீச்சு: ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் பொதுப்பணித் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் மீது ஆசிட் பாட்டில் வீசிய ஒருவரைப் போலீசார்கைது செய்தனர்.
மதுரையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசி முடித்த உடனேயே கூட்டத்திலிருந்த ஒரு நடுத்தர வயது நபர், தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்பாட்டிலை எடுத்து மேடையை நோக்கி வீசினார்.
ஆனால் அது மேடைக்கு முன்னாலிருந்த ஒரு கம்பத்தில் பட்டு கீழே விழுந்தது. இதனால் தளவாய் சுந்தரம் தப்பித்துவிட்டார். வேறு யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை.
போலீசார் உடனடியாகச் செயல்பட்டு ஆசிட் பாட்டிலை வீசிய நபரைச் சுற்றி வளைத்து கைது செய்தனர்.இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications