இந்தியாவில் புலிகள் பேச்சு நடத்த சிதம்பரமும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

நார்வே குழுவினருடன் விடுதலைப் புலிகள் இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசுமனுமதியளிக்கக் கூடாது என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப. சிதம்பரம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வலியுறுத்தினார்.

இலங்கையில் அமைதி திரும்புவதற்காக பேச்சுவார்த்தைக்கான பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தென்னிந்தியாவில் உள்ள சென்னை அல்லது பெங்களூரில் பேச்சுவார்த்தை நடத்த அனுமதியளிக்கவேண்டும் என்று விடுதலைப் புலிகள் இந்தியாவைக் கோரி வருகின்றனர்.

ஆனால் அதிமுக, காங்கிரஸ், தமாகா உள்ளிட்ட பல தமிழக அரசியல் கட்சிகளும் புலிகள் இந்தியாவில்பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இந்நாள் முதல்வர் பன்னீர்செல்வமும் இதுகுறித்து பிரதமர் வாஜ்பாய்க்குக்கடிதம் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் புலிகள் இந்திய மண்ணில் பேச்சுவார்த்தை நடத்த அனுமதியளிக்கக் கூடாது என்று சிதம்பரமும்மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமரசம் செய்யப் போய் முன்பு பட்ட காயத்தை இந்தியாமறந்துவிடக் கூடாது என்றும் சிதம்பரம் கூறினார்.

வேறு எந்த நாட்டில் வேண்டுமானாலும் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தட்டும். ஆனால் இந்தியாவின் எந்தப்பகுதியிலும் அவர்கள் நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் சிதம்பரம் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+