தமிழக ஆளுநருடன் கருணாநிதி திடீர் சந்திப்பு
சென்னை:
தமிழகத்தின் புதிய ஆளுநரான ராம்மோகன் ராவை திமுக தலைவர் கருணாநிதி திடீர் என்று சந்தித்துப் பேசினார்.
நேற்று (சனிக்கிழமை) மாலை சுமார் 5.30 மணிக்கு ராஜ் பவனுக்குச் சென்று ராம்மோகன் ராவைக் கருணாநிதிசந்தித்தார்.
ராம்மோகன் ராவுக்கு மலர்க் கொத்து வழங்கி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார் கருணாநிதி.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று கூறினார்.
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் குறித்து ஆளுநருடன் எதுவும் பேசவில்லை என்றும் கருணாநிதி கூறினார். "புதிதாகஒரு ஆளுநர் வந்ததும் வராததுமாக அவரிடம் புகார் சொல்லக் கூடாதல்லவா?" என்றார் அவர்.
ராம்மோகன் ராவுடன் பழைய நினைவுகளை மட்டுமே பகிர்ந்து கொண்டேன் என்றும் கருணாநிதி நிருபர்களிடம்தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் யோசனைப்படிதான் ராம்மோகன் ராவ் தமிழக ஆளுநராகியுள்ள நிலையில், அவரைக் கருணாநிதிசந்தித்தது குறிப்பிடத்தக்கது.