காங்கோவில் எரிமலையின் சீற்றத்துக்கு 40 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோமா (காங்கோ):
காங்கோ நாட்டில் உள்ள எரிமலை குமுற ஆரம்பித்ததில் 40 பேர் பலியாகியுள்ளனர்.
அதிலிருந்து லாவா குழம்பு வெளியேறி, அருகில் உள்ள கிராமங்களில் ஓட ஆரம்பித்துள்ளது. இதையடுத்து அந்தமலையைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து சுமார் 5 லட்சம் மக்கள் பெட்டி-படுக்கையுடன் வெளியேறி விட்டனர்.
பெரும்பான்மையான கோமா நகர மக்களும் வெளியேறி, எல்லையைக் கடந்து பக்கத்து நாடானருவாண்டாவுக்கும் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையே கோமாவில் உள்ள ஏரித் தண்ணீருடன் லாவா குழம்பும் கலந்ததால் அந்த நீரைக் குடித்த மக்கள்காலரா உள்ளிட்ட பல நோய்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக சுமார் 40 பேர் வரை பலியாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவிதுள்ளனர்.
இந்த எரிமலையின் அடுத்த பகுதியில் சுமார் 2 லட்சம் பேர் உணவு, தண்ணீர், மின்சார வசதி கிடைக்காமல் சிக்கிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications