ராமதாசின் காதல் கடிதங்களை புத்தகமாக வெளியிட கருணாநிதி யோசனை

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது காதல் கடிதங்களை புத்தகமாக வெளியிட வேண்டும் என திமுக தலைவர்கருணாநிதி யோசனை தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் இரண்டு மகன்களின் திருமணம் கருணாநிதியின் தலைமையில்விழுப்புரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.

இந்த திருமணத்தில் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ராஜா, நடிகர்விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த திருமணவிழாவில் ராமதாஸ் பேசும்போது கூறியதாவது:

காதலித்தவர்களுக்குதான் காதலின் சுவை தெரியும். கல்லூரியில் நானும் காதலித்துதான் திருமணம் செய்துகொண்டேன்.

அப்போது நான் எழுதிய காதல் கடிதங்களை என் மனைவி இன்னும் பத்திரமாக வைத்துள்ளார் என்று ராமதாஸ்கூறினார்.

அதன் பிறகு கருணாநிதி பேசியபோது கூறியதாவது:

இங்கே அரசியல் பேச வேண்டாம் என பொன்முடி என்னைக் கேட்டுக் கொண்டார். மேலும் திண்டிவனம்ராமமூர்த்தி முன்னால் உட்கார்ந்திருக்கும்போது அரசியல் பேசுவது நாகரிகம் அல்ல. இது அரசியல் பேசும்தருணமும் அல்ல.

இது ஒரு காதல் திருமணம் என எல்லோரும் புகழ்ந்து பேசினர். குறிப்பாக ராமதாஸ் பேசும்போது, தானே காதல்திருமணம் செய்து கொண்டவர் என்று பேசினார். அவர் தனது காதல் கடிதங்களை இன்னும் பத்திரமாகவைத்திருப்பதாக கூறினார்.

எதிர்கால சமுதாயத்துக்கு பயன்பட, அந்த காதல் கடிதங்களை புத்தகமாக ராமதாஸ் வெளியிட்டால் இளைஞர்கள்பயன்படுத்துவதற்கு வழி ஏற்படும் என்று கருணாநிதி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+