For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ரா" உளவுப் பிரிவை உருவாக்கியவர் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

வெளிநாட்டு ரகசியத் தகவல்களைச் சேகரிக்கும் இந்திய உளவுப் பிரிவான "ரா"வை (Research and Analysis Wing)உருவாக்கிய ஆர்.என். காவ் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 84.

இந்தியக் காவல் பணியில் 1940ம் ஆண்டு சேர்ந்த காவ், 1947ல் உளவுப் பிரிவில் சேர்ந்தார்.

1968ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி "ரா" அமைப்பு உருவாக்கப்பட்டபோது அப்பிரிவின் தலைவராக காவ்நியமிக்கப்பட்டார். இந்த அமைப்புக்கு உளவாளிகளைக் கொண்டு சர்வதேச அளவில் "நெட்வொர்க்"கைஉருவாக்கியவர் இவர்தான்.

1971ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின்போது, உளவறிந்து ஏராளமான தகவல்களைச் சேகரித்த காவ்,அப்போரின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார். 1977ல் ஓய்வு பெற்றார்.

முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரிடம் மூத்த ஆலோசகராகபணியாற்றியுள்ளார்.

விளம்பரங்களை விரும்பாத அவர், பத்திரிக்கைகளில் தன்னுடைய பெயர் வருவதைக் கூட தவிர்த்து வந்தார்.

தன்னுடைய நீண்டகால அனுபவங்களைப் புத்தகமாக எழுதவும் அவர் மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய உளவுத் துறையின் தந்தையாகவே காவ் கருதப்படுகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X