ஆப்கான் செல்லும் இந்திய கோதுமையில் கிருமிகள்: பாகிஸ்தான் குற்றச்சாட்டு
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பும் கோதுமையில் கிருமிகள் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள பாகிஸ்தான்,இதனால் தங்கள் நாட்டு வழியாக இந்தக் கோதுமையை அனுப்ப மறுத்துள்ளது.
இந்தக் கோதுமை சிறிது சிறிதாக தற்போது பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியா அனுப்பும் கோதுமையில் ஏராளமான கிருமிகள் இருப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
இந்தக் கிருமிகள் பாகிஸ்தானில் விளையும் கோதுமையையும் தாக்கி விடும் என்று நாங்கள் அஞ்சுவதால், எங்கள்நாட்டு வழியாக இந்தியக் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப அனுமதிக்கப் போவதில்லை என்றுபாகிஸ்தான் உணவு அமைச்சர் காயர் முகம்மது ஜுனெஜோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக உலக உணவுத் திட்டத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் பல ஆண்டுகளாகவே நல்லுறவு இருந்து வந்துள்ளது.
அதிலும் தலிபான்கள் ஆட்சி முடிவுக்கு வந்ததிலிருந்து இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே உள்ளநெருக்கம் மேலும் அதிகரித்துள்ளது. அந்நாட்டில் இடைக்கால அரசு நியமிக்கப்பட்டதிலிருந்து அந்நாட்டின் பலஅமைச்சர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.
இதனால் பாகிஸ்தான் பெரிதும் எரிச்சலடைந்துள்ளது. இந்நிலையில்தான் இந்தியாவின் கோதுமையில் கிருமிகள்உள்ளன என்ற கேவலமான குற்றச்சாட்டை பாகிஸ்தான் சுமத்தியுள்ளது.