விழுப்புரம் அதிமுக கவுன்சிலர் கொலை: திமுக மீது ஜெ. புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விழுப்புரம் அதிமுக கவுன்சிலரை கொலை செய்த திமுகவினர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் நகராட்சி அதிமுக கவுன்சிலர் கோவிந்தனை, திமுகவினர் முன்விரோதம் காரணமாக தாக்கி கொலைசெய்துள்ளனர்.
பொது மக்கள் நலனில் அக்கறைக் காட்டிய கோவிந்தனை அவர்கள் திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். அவர்கள்மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொலை செய்யப்பட்ட கோவிந்தன் குடும்பத்துக்கு, அதிமுக சார்பில் ரூ.50,000 குடும்ப நல நிதியாக வழங்கப்படும்என்று ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications