புலிகள் மீதான தடையை நீக்க ரணில் ஆதரவு
கொழும்பு:
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆதரவுதெரிவித்துள்ளார்.
ஆனால் பேச்சுவார்த்தைக்கு முன் தங்கள் மீதுள்ள தடையை முழுமையாக அரசு நீக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) ரணில் நாடாளுமன்றத்தில்கூறியதாவது:
விடுதலைப்புலிகளுடனான பேச்சு வார்த்தைக்கு இது தான் கடைசி வாய்ப்பு. இந்த வாய்ப்பை நாம் நன்றாகப்பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் நாம் நம் மக்களுக்கு துரோகம் செய்வது போல்ஆகிவிடும்.
விடுதலைப் புலிகளிடமிருந்து வட இலங்கையை மீட்க இத்தனை நாட்கள் போராடினோம். ஆனால் இதுவரைஅப்பகுதியை நம்மால் பிடிக்க முடியவில்லை. இந்தப் போரினால் நமது நாட்டின் பொருளாதாரம்தான் பாதித்தது.
அதனால் விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளை நாம் பரிசீலிக்க வேண்டும். நமது கோரிக்கையையும் நார்வேகுழுவிடம் தெரியப்படுத்துவோம் என்று விக்கிரமசிங்கே கூறினார்.
இதையடுத்து விரைவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை இலங்கை அரசு விலக்கிக் கொள்ளும் என்றுதெரிகிறது.
முன்னதாக அரசு மற்றும் விடுதலைப் புலிகள் இருவருமே போர் நிறுத்தத்தை மேலும் 1 மாதத்துக்குநீட்டித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications