அரசுத் தொட்டிலில் 6 மாதத்தில் 59 பெண் சிசுக்கள்
சேலம்:
கடந்த 6 மாதங்களில் மட்டும் சேலம் அரசுத் தொட்டில் திட்டத்தின் மூலம் 59 பெண் சிசுக்கள்ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பெண் சிசுக்கொலை தடுப்பு பற்றி சேலம் கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து மனுநீதிநாட்களில் பெண் சிசு ஒப்படைப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது சேலம் மாவட்டத்தில் தான் பெண் சிசுக் கொலை அதிகம் நடந்து வருகிறது. இதனை ஒழிக்கமாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழுக்களைசேலம் ஊராட்சி ஒன்றியங்களில் அமைத்துள்ளன.
இதனால் பெண் சிசுக்கொலை குறைந்து, அரசுத் தொட்டிலில் ஒப்படைப்பது பெருகி வருகிறது.
நங்கவள்ளி பெரியசொரகை கிராமத்தைச் சேர்ந்த சின்னமணி, பாப்பா தம்பதிகளுக்குப் 3வது பெண் குழந்தைபிறந்திருந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மனு நீதி நாளில் கலெக்டர் ராதாகிருஷ்ணனிடம் அவர்கள் நேற்று (திங்கட்கிழமை)இந்தப் பெண் குழந்தையை ஒப்படைத்தனர்.
இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருப்பதால், டாக்டர்களின் அறிவரைப்படி இவர்கள் 3வது பெண்பெண் குழந்தையை அரசு தொட்டில் திட்டத்தின் மூலம் ஒப்படைத்துள்ளனர்.
இக்குழந்தையுடன் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் சேலம் அரசுத் தொட்டிலில் 59 பெண் சிசுக்கள்ஒப்படைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications