பாகிஸ்தான் வருகிறார் கோபி அன்னான்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைத் தவிர்ப்பதற்காக ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபைபொதுச் செயலாளர் கோபி அன்னான் இன்று (புதன்கிழமை) மாலை பாகிஸ்தான் வருகிறார்.
காஷ்மீர் பிரச்சனையில் ஐ.நா. தலையிடாது என்று ஏற்கனவே அன்னான் கூறியுள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும்கேட்டுக் கொண்டால் மட்டுமே அப்பிரச்சனையில் தலையிடப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் காஷ்மீர் பிரச்சனையில் எந்தவொரு 3வது நாடோ அமைப்போ தலையிட முடியாது என்று இந்தியாஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில் அன்னானின் வருகையால் பாகிஸ்தான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஐ.நா.வின்அமைதித் தூதராய் வரும் அன்னானின் வருகை முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறைசெய்தித் தொடர்பாளர் அசிஸ் அகமது கான் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications