For Daily Alerts
Just In
கொல்கத்தா தாக்குதலுக்கு புஷ் கண்டனம்
வாஷிங்டன்:
கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையம் மீது நடந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் போலீசார் மீதுதான் தாக்குதல் நடந்துள்ளதால், இது உண்மையிலேயே அமெரிக்காவிற்கு எதிரானதாக்குதல்தானா என்று சந்தேகமாக உள்ளது என்றும் புஷ் தெரிவித்தார்.
யார் மீது தாக்குதல் நடந்தாலும் தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றுகூடி முன்வர வேண்டும்என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, இத்தாக்குதல் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடனும்பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புடனும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காலின் பாவல் தொலைபேசிமூலம் பேசினார்.
கடந்த வாரம்தான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பாவல் வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
pakistan terrorism commando military cash parliament bin laden rajya sabha computer ambulance poto apple ammunition
Story first published: Tuesday, January 23, 2001, 5:30 [IST]