For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈராக்கில் அமெரிக்க விமானங்கள் குண்டு வீச்சு

By Staff
Google Oneindia Tamil News

மனாமா:

அமெரிக்க, பிரிட்டிஷ் விமானங்கள் திடீரென்று ஈராக்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குண்டு வீச்சுத் தாக்குதல்நடத்தியுள்ளன.

தெற்கு ஈராக்கின் வான் பகுதியில் அமெரிக்க, பிரிட்டிஷ் விமானங்கள் பறந்து சென்றதையடுத்து, அவற்றை நோக்கிவிமான எதிர்ப்பு பீரங்கிகளால் ஈராக் படையினர் சுட்டனர்.

உடனே அமெரிக்க, பிரிட்டிஷ் விமானங்களும் பதில் தாக்குதல் நடத்தின. ஈராக்கின் விமான எதிர்ப்பு பீரங்கித்தளத்தில் இவ்விமானங்கள் குண்டு வீசி விட்டு மறைந்தன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இதேபோன்ற குண்டு வீச்சுத் தாக்குதலை ஈராக் மீது அமெரிக்கா நடத்தியதுகுறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இப்போதுதான் முதல் முறையாகத் தாக்குதல் நடந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் நாங்கள் நடத்தி வரும் தீவிரவாதத்துக்கு எதிரான போர் ஈராக் மீதும் திரும்பும் என்று அமெரிக்கஅதிபர் ஜார்ஜ் புஷ் ஏற்கனவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை:

இந்நிலையில் ஈராக் மீதான அமெரிக்காவின் குண்டு வீச்சுத் தாக்குதலை ரஷ்யா கடுமையாகக் கண்டித்துள்ளது.

தீவிரவாதத்துக்கு எதிரான தாக்குதல் என்று கூறிக்கொண்டு அமெரிக்கா மீண்டும் பாக்தாத்தைத் தாக்கினால்,மோசமான விளைவுகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X