விமானத்தில் வந்த ஜெ., ரயிலில் வந்த பன்னீர்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ஆண்டிப்பட்டியில் நாளை (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா இன்று பிற்பகல் விமானத்தில் வந்து சேர்ந்தார்.

ஆனால் அவரை வரவேற்பதற்காக வந்த தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று காலை ரயிலில் வந்து சேர்ந்தார்.

இன்று பிற்பகல் சுமார் 1.30 மணிக்கு வந்த ஜெயலலிதாவுக்கு மதுரை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்புகொடுக்கப்பட்டது.

ஜெயலலிதாவை வரவேற்பதற்காக அதிமுகவினர் கரகாட்டக் குழுவினரையும், பேண்டு வாத்தியக் குழுவினரையும்ஏற்பாடு செய்திருந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், அதிமுக தொண்டர்களும் மதுரை விமானநிலையத்துக்கு வந்து குவிந்திருந்தனர்.

ஆனால் விமானத்தில் வந்து இறங்கிய ஜெயலலிதா, சில நிமிடங்களிலேயே தான் தங்கவுள்ள ஹோட்டலுக்குக்காரில் ஏறிப் பறந்து விட்டார்.

மதுரை விமான நிலையத்திலிருந்து ஜெயலலிதா தங்கவுள்ள ஹோட்டல் வரை ஏராளமான அலங்காரவளைவுகளையும், பேனர்களையும் அதிமுகவினர் கட்டியிருந்தார்கள். வழி நெடுக ஆயிரக்கணக்கானபோஸ்டர்களும் ஜெயலலிதாவை வரவேற்றன.

மேலும் விமான நிலையத்திலிருந்து ஜெயலலிதா தங்கவுள்ள ஹோட்டல் வரை நூற்றுக்கணக்கான போலீசார்பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். அந்த ஹோட்டலிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+